திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மகளிர் சமூக - பொருளாதார நிலைகளில் மேம்பாடு

"திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே தான் மகளிர் சமூக - பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடையவும், ஜனநாயக ரீதியான அதிகாரங்களை பெறவும் முன்னுரிமை தந்து, பெண்களுக்குச் சொத்துரிமை, உள்ளாட்சித் தேர்தல்களில் 33 சதவிகித இட ஒதுக்கீடு, அரசுப் பணிகளில் 30 சதவிகித ஒதுக்கீடு, பல்வேறு திருமண உதவித் திட்டங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மகப்பேறு நிதி உதவித் திட்டம், இலவசப் பட்டப் படிப்புத் திட்டம் என்பன போன்ற பல்வேறு திட்டங்களைத் தொடங்கி, அவர்கள் வாழ்விலே ஒளியேற்றிடுவதற்கான முனைப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

அந்த வரிசையில் கிராமப் புற ஏழையெளிய பெண்களை சமூக, பொருளாதார நிலைகளில் உயர்த்திடும் நோக்கில் பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதி உதவியுடன் தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டுத் திட்டம் 1989 ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் கலைஞர் அரசினால் தொடங்கப்பட்டது.

1996 ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் ஆட்சி பொறுப்பேற்றவுடன், பன்னாட்டு விவசாய வளர்ச்சி நிதித் திட்டம் முழுவதுமாக புதிதாக உருவாக்கப் பட்ட மகளிர் திட்டத்தோடு இணைக்கப்பட்டது.

இதுவே மகளிர் சுய உதவிக் குழுத் திட்டமாகும்.

1997-98இல் 14 மாவட்டங்களிலும், 1998-99இல் 7 மாவட்டங் களிலும், 1999-2000இல் 7 மாவட்டங்களிலும் என சென்னை நீங்கலாக 28 மாவட்டங்களில் செயல்படத் தொடங்கி,

31-12-2010 வரை 75,66,497 மகளிரை உறுப்பினர்களாகக் கொண்ட 4,88,970 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப் பட்டன.

இவர்களின் மொத்த சேமிப்பு மட்டும் 2,658 கோடி ரூபாய்.

30-9-2010 அன்றைய அளவில், சுய உதவிக் குழுக்களுக்கு 1989ஆம் ஆண்டு முதல் 9,521 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டது.

2006-2007ஆம் ஆண்டு முதல், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்குச் சுழல் நிதி வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, 5 ஆண்டு கால கலைஞர் ஆட்சியில், 96,699 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு 96 கோடியே 70 இலட்ச ரூபாய் சுழல் நிதி மானியமாக மட்டும் வழங்கப்பட்டது.

2008-2009ஆம் ஆண்டில் மட்டும், அதுவரை சுழல் நிதி பெறாத தகுதி வாய்ந்த ஒன்றரை இலட்சம் சுய உதவிக் குழுக்களுக்கும் சுழல் நிதி மானியம் வழங்க அரசு முடிவு செய்து, அதன்படி சுழல் நிதி மானியம் பெறாத அனைத்து ஒன்றரை இலட்சம் சுய உதவிக் குழுக் களுக்கும் வங்கிக் கடனுடன் 150 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களைச் சந்தைப்படுத்து வதற்காக மாவட்டங்கள்தோறும் பொருள்காட்சிகள் நடத்தப்பட்டதோடு, மாநில அளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நிரந்தர சந்தை வளாகம் ஒன்று "அன்னை தெரசா மகளிர் வளாகம்"என்ற பெயரில் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது.

இவ்வாறு கிராமங்களிலிருந்து தொடங்கி, தமிழகத்தின் தலைநகர் வரை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சேமிப்பு, கடன் வசதி, உற்பத்திப் பொருள் களுக்கு உரிய சந்தை என அனைத்து வகைகளிலும் தேவையான கட்டமைப்பு வசதிகள் கலைஞர் ஆட்சியில் உருவாக்கித் தரப்பட்டன.

மகளிர் சுய உதவிக் குழுக் களின் மேம்பாட்டுக்காக அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த  திமுக தலைவர் திரு.ஸ்டாலின், அதிலே மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பல மணி நேரம் செலவிட்டு மகளிருக்கான சுழல் நிதியினை தானே நேரடியாக வழங்கி அதிலே ஒரு பெரும் புரட்சியையே ஏற்படுத்தினார் என்பதை தமிழ்நாட்டிலே உள்ள அனைவரும் அறிந்ததே.

Credit : Vikatan

திராவிட பேரரசன் 👑
கலைஞர் 🕶🖋

கலைஞரிஸ்ட் - kalaignarist

Comments